நயன்தாரா: என் கணவரே எனக்கு பக்க பலம்

என் கணவர்தான் எனது மிகப்பெரிய பலம் என்று ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசினார் நயன்தாரா.

ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஓர் ஆண் இருப்பார் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, “எப்போதும் நம் காதில் விழக்கூடிய விஷயம், ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பதுதான். ஆனால் மிக அரிதான ஒரு விஷயம் என்னவென்றால் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஓர் ஆண் இருப்பார்.

“என்னுடைய வாழ்க்கையில் சினிமா தவிர நான் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் பின்னால் என் கணவர் இருக்கிறார்.

“நான் அவரைச் சந்தித்த பிறகு நான் இன்னும் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று அவர் எனக்கு கற்று கொடுத்துள்ளார்.

“என்றைக்குமே இதை ஏன் செய்கிறீர்கள்? அதை ஏன் செய்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டதில்லை. மாறாக இதை ‘ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள்?’ ‘ஏன் இதோடு நிற்க வேண்டும்?’ என்று தான் கேட்பார். எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்” இவ்வாறு நயன்தாரா பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!