சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (மே 7) பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து பரபரப்பான சாலையின் குறுக்கே விழுந்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுபோனார்.

பலத்த காற்று, பெருமழைக்கு இடையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

மரம் விழுந்து அமுக்கியதால் வாகனங்களுக்குள் பலர் சிக்கிக்கொண்டதாக ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி தெரிவித்தது.

‘மோனோ’ ரயில் தண்டவாளத்திலும் சாலையிலும் மரம் விழுந்ததை அடுத்து, கேஎல் சென்ட்ரல் - மேடான் துவாங்கு இடையிலான ஒன்பது ரயில் நிலையங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக ‘ரேப்பிட் கேஎல்’ ரயில் சேவை நிறுவனம் தெரிவித்தது.

கன்கார்டு ஹோட்டலுக்கு அருகே, ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் தங்கள் கார்களுக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்டதாகக் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.

அவர்களில் 47 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்னொரு 26 வயது ஆடவருக்குப் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன.

மரம் விழுந்ததால் பாதிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து அவற்றின் ஓட்டுநர்களையும் பயணிகளையும் மீட்க மக்கள் உதவியதை இணையத்தில் பகிரப்பட்ட படங்கள் காட்டின.

முன்னதாக, திங்கட்கிழமை மாலையில் பினாங்கில் வீசிய திடீர் புயலால் பத்து இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்ததாக ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டிருந்தது.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!