முன்னணி தளபதியைப் பணிநீக்கம் செய்வது குறித்து உக்ரேன் வெள்ளை மாளிகையிடம் கூறியுள்ளது : தகவல்கள்

டொனெட்ஸ்க், உக்ரேன்/வாஷிங்டன்: உக்ரேனிய அரசாங்கம் ரஷ்யப் படைகளுக்கு எதிரான போரை மேற்பார்வையிடும் நாட்டின் முன்னணி ராணுவத் தளபதியைப் பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக வெள்ளை மாளிகையிடம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறியுள்ளன.

ராணுவ உத்திகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஜெனெரல் வெலரி ஸலுஸ்னிக்கும் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய ராணுவத் திட்டம் ஒன்றின் தொடர்பில் 500,000 புதிய படையினரைப் பணியில் அமர்த்துவதற்கு ஜெனரல் ஸலுஸ்னி செய்த பரிந்துரையை அதிபர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரேன் ஆயுதப் படையின் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் ஸலுஸ்னியைப் பணிநீக்கம் செய்யும் செயல்முறை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. அவரின் பதவியைத் தொடர்வதற்குத் தகுதியான ஒருவரை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதே அதற்குக் காரணம்.

ஜெனரல் ஸலுஸ்னியைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை வெள்ளை மாளிகை ஆதரிக்கவோ, நிராகரிக்கவோ இல்லை என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!