‘ஆயுதங்கள் வழங்கமாட்டோம்’: இஸ்‌ரேலுக்கு பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: ராஃபா மீது பேரளவிலான தாக்குதலை இஸ்‌ரேல் நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அதிபர் பைடன் இஸ்ரேலைப் பகிரங்கமாக எச்சரித்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

“இஸ்‌ரேலிடம் தெளிவாக, உறுதியாகக் கூறிவிட்டேன். ராஃபா மீது அது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை அனுப்பாது என்று தெரிவித்துவிட்டேன்,” என்று சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் பைடன் கூறினார்.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்‌ரேல் கடந்த ஏழு மாதங்களாகப் போரிட்டு வருகிறது.

இதில் காஸா மீது அது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்கா வழங்கிய குண்டுகளை இஸ்‌ரேல் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதில் காஸாவைச் சேர்ந்த பல அப்பாவி மக்கள் மாண்டுவிட்டதாக அதிபர் பைடன் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் மே 9ஆம் தேதி தொடரும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

கெய்ரோவில் ஹமாஸ், இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர் குழு மே 7ஆம் தேதி முதல் சந்தித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!