பாரிஸ்: சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் சென்றிருக்கிறார்.
ஐந்தாண்டுகளில் முதன்முறையாக ஸி, ஐரோப்பாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். வர்த்தகம் கூடுதல் சீராக இருப்பதை உறுதிப்படுத்துமாறு பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரான், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் இருவரும் திரு ஸியிடம் கேட்டுக்கொண்டனர்.
உக்ரேன் விவகாரம் தொடர்பிலும் திரு மெக்ரான், திரு ஸியுடன் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன மின்சார வாகன ஏற்றுமதி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை நடத்திவருகிறது, பிரான்சில் தயார்செய்யப்படும் பிராந்தி மதுபானம் தொடர்பில் பெய்ஜிங் விசாரணை நடத்துகிறது.
இவற்றால் பிரான்சுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியில் பதற்றம் நிலவிவந்தாலும், திரு ஸி அறிக்கை ஒன்றில் இருநாட்டு உறவைப் பாராட்டியுள்ளார். அவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தவுடன் அந்த அறிக்கை வெளியானது.