கென்யா வெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 228ஆக அதிகரிப்பு

நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 228 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகப் பெய்த கன மழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டன. மே மாதத்திலும் கனமழை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதால் கென்ய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாழ்வான பகுதிகளிலும் மலையடிவாரங்களிலும் ஆற்றின் ஓரங்களிலும் வாழ்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

கனமழை காரணமாகக் கென்யாவின் போக்குவரத்து கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமாகியுள்ளன.

வீடுகள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 200,000க்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!