பிரேசிலில் வெள்ளம்; பலர் மரணம், 70,000 பேர் வெளியேற்றம்

போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.

மோசமான வெள்ளத்தால் குறைந்தது 57 பேர் மாண்டுவிட்டனர், 74 பேர் காயமுற்றனர். குறைந்தது 67 பேரைக் காணவில்லை.

தெற்கு பிரேசிலின் முக்கிய நகரான போர்ட்டோ அலெக்ரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் வெள்ளம் சூழ்ந்த பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் இருவர் மாண்டனர்.

அச்சம்பவத்தை ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் நேரில் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மொத்த மரண எண்ணிக்கையில் இந்தப் புள்ளி விவரம் சேர்க்கப்படவில்லை.

ரியோ கிராண்டே டொ சுல் மாநிலத்தில் நீரின் அளவு வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் குறிப்பாக பொருளியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த போர்ட்டோ அலெக்ரேவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அந்நகரில் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

1941ஆம் ஆண்டில் பிரேசில் மோசமான வெள்ளத்துக்கு உள்ளானது. அப்போது போர்ட்டோ அலெக்ரே நகரின்வழி ஓடும் குவாய்பா ஆற்றில் நீர் மட்டம் 4.76 மீட்டராக இருந்தது.

இப்போது அந்த ஆற்றில் நீர் மட்டம் அதற்கும் அதிகமாக 5.04 மீட்டரில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!