பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 20 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 3) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் மாண்டதாகவும் மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் அரசாங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ராவல்பிண்டியிலிருந்து மலைப்பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்தது.

மீட்புப் பணியாளர்கள் விரைந்து பணியில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பாகிஸ்தானில் அடிக்கடி கோர விபத்துகள் நடைபெறுகின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததும் கிராமப்புறங்களில் சாலைகள் சரிவரப் பராமரிக்கப்படாததும் இதற்குக் காரணங்கள் என்பதை ராய்ட்டர்ஸ் சுட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!