இந்தியப் பெருங்கடலில் கொள்கலன் கப்பல்மீது தாக்குதல் நடத்திய ஹூதி படை

துபாய்/கெய்ரோ: இந்தியப் பெருங்கடலில் எம்எஸ்சி ஓரியன் கொள்கலன் கப்பலைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடந்தப்பட்டதாக ஏமனின் ஹூதிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

காஸா போரில் ஈடுபட்டு வரும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹூதிப் படை செயல்பட்டு வருகிறது.

பாலஸ்தீனர்களின் ஒற்றுமையைக் காட்டவும் காஸாவில் ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்குப் பதிலடி தரும் விதமாகவும் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹூதி போராளிகள் இறங்கியுள்ளனர்.

போர்ச்சுகல் நாட்டுக் கொடியுடன் எம்எஸ்சி ஓரியன் கப்பல் போர்ச்சுகளின் சைன்ஸ், ஓமானின் சலாலா ஆகிய துறைமுகங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அக்கப்பலின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ‘சோடியாக் மரிடைம்’ நிறுவனம் எனவும் லண்டன் பங்குச் சந்தைக் குழுமத்தின் (எல்எஸ்இஜி) தரவுகள் தெரிவித்தன.

அந்நிறுவனம் இஸ்ரேலியத் தொழிலதிபர் இயல் ஆஃபருக்கு சொந்தமானது என்றும் இத்தாக்குதல் குறித்த கேள்விக்கு அந்நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!