மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது; முகைதீனுக்குப் பின்னடைவு

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் யாசின் தொடர்பான 232.5 மில்லியன் ரிங்கிட் (S$66.11 மில்லியன்) ஊழல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து திரு முகைதீன் கூட்டரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்திடம் திரு முகைதீன் மேல்முறையீடு செய்ய முடியாது என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

திரு முகைதீன் தொடர்பான இந்த வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியதால் மேல்முறையீட்டுக்கான ஆக உயரிய அதிகாரம் மேல்முறையீடு நீதிமன்றத்திடம் மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

76 வயது திரு முகைதீன் மலேசியாவின் பிரதமராக இருந்தபோது அப்பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மூன்று நிறுவனங்களிடமிருந்து 232.5 மில்லியன் ரிங்கிட் (S$66.11 மில்லியன்) லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!