அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி மதியம் நடந்த அந்த துப்பாக்கிச்சூடு பள்ளியில் நடந்துள்ள மற்றொரு துப்பாக்கி வன்முறைச் சம்பவம் என்று காவல்துறை கூறியுள்ளது.

பெஞ்சமின் இ.மேஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து சுடப்பட்டனர். இதில் நான்கு மாணவர்கள் காயம் அடைந்தனர். நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.

காயம் அடைந்த மூன்று ஆண் மாணவர்களின் வயது 17. மற்றொரு மாணவரின் வயது 18.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு சண்டை நடந்ததாகத் தெரிவித்தனர்.

இந்தக் குற்றத்தைச் செய்தவர்களை கண்டுபிடிக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அட்லாண்டா பொதுப் பள்ளிகளின் காவல்துறைத் தலைவர் ரோனால்ட் அப்லின் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!