இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவடைந்தன

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அதனை முன்னிட்டு நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டங்கள் பிப்ரவரி 10ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

இந்தத் தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பேசப்படுகிறது.

அவரது துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனும் சோலோ நகரின் மேயருமான திரு ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா போட்டியிடுகிறார்.

இந்தோனீசிய அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

திரு பிரபோவோவை எதிர்த்து முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அனீஸ் பஸ்வெடனும் முன்னாள் மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரனோவோவும் போட்டியிடுகின்றனர்.

நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் திரு பிரபோவோ முதலிடத்தையும் திரு அனீஸ் இரண்டாவது இடத்தையும் திரு கஞ்சார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பிப்ரவரி 14ஆம் தேதியன்று அதிபர் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. இவற்றில் வாக்களிக்க ஏறத்தாழ 205 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பிரசாரக் கூட்டத்தின் கடைசி நாளான பிப்ரவரி 10ஆம் தேதியன்று மூன்று வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!