ரஷ்யா: வெதுப்பகம் மீது உக்ரேன் நடத்திய தாக்குதலில் 28 பேர் மாண்டனர்

மாஸ்கோ: ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரமான லிசிசான்ஸ்க்கில் இருக்கும் வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றின் மீது உக்ரேனியப் படைகள் நடத்திய தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்திருப்பதாக ரஷ்யா கூறியது.

தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததாகவும் அது தெரிவித்தது.

இடிபாடுகளுக்கு அடியிலிருந்து 28 சடலங்களை மீட்டதாக ரஷ்யா தெரிவித்தது.

காயமடைந்த இருவரை ரஷ்ய மீட்புப் பணியினர் தூக்குப் படுக்கையில் வைத்து கொண்டுசெல்வதைக் காட்டும் காணொளியை ரஷ்ய அவசரநிலை அமைச்சு வெளியிட்டது.

காயமடைந்த பத்துப் பேரை தனது மீட்புப் பணியினர் காப்பாற்றியதாகவும் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் அமைச்சு கூறியது.

இதுகுறித்து, உக்ரேனிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்யா கூறியது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்த கட்டடத்தில் பொதுமக்கள் பலர் இருந்ததாக அது தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!