எண்ணெய் முனையத்தைக் குறி வைத்து அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்: ஹுதி

கெய்ரோ: ஏமனின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ராஸ் இஸா துறைமுகத்தைக் குறி வைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் வான்வழியாக இரண்டு தாக்குதல்களை நடத்தியதாக ஹுதி அமைப்பின் அல்-மசிரா தொலைக்காட்சி கூறி உள்ளது.

இருப்பினும், இது தொடர்பான மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.

செங்கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஏமனின் ஹுதி கிளர்ச்சிப் படையினர் அதிகரித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் பிரிட்டனும் அதற்கு எதிராகக் களத்தில் குதித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய்க் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரியும் வகையில் ஹுதிப் படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

டிராஃபிகுரா வியாபார நிறுவனத்தின் சார்பாக இயக்கப்பட்ட மர்லின் லுவாண்டா என்னும் அந்தக் கப்பல் தீயில் சேதமடைந்ததாகவும் யாரும் காயமடைந்தது பற்றி தகவல் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது.

அந்தக் கப்பலைக் காப்பாற்றி மீட்கும் பணிக்கு அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்று உதவியதாகவும் அது தெரிவித்தது.

இச்சம்பவம் நிகழ்ந்த 8 மணி நேரத்திற்குப் பின் ஹுதி அமைப்பின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அமெரிக்க ராணுவம் அழித்ததாக ராணுவத்தின் மத்திய தளபத்தியம் டுவிட்டரில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!