வாஷிங்டன்: செல்வந்தவரும் முன்னாள் உயிர்தொழில்நுட்பத்துறை நிர்வாகியுமான விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதிப்பவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு அயோவாவில் நடைபெற்றது.
இதில் போதுமான வாக்குகளைச் சேகரிக்க திரு விவேக் ராமசாமி தவறிவிட்டார்.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அவர் 7.7 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பிற்கு ஆதரவு அளிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
38 வயது திரு விவேக் ராமசாமியின் பெற்றோர் தென்னிந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர்கள்.