குகையிலிருந்து காற்பந்துக் குழுவினர் மீட்கப்பட்டு ஐந்தாண்டு நிறைவு

மா சாய், தாய்லாந்து: வடதாய்லாந்தில் வெள்ளக்காடான குகையிலிருந்து 12 இளம் காற்பந்து ஆட்டக்காரர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நூற்றுக்கணக்கானோர் திங்கட்கிழமை குகையில் ஒன்றுதிரண்டனர்.

தங்களை மீட்க 18 நாள்கள் இரவு பகலாக உழைத்த ஆயிரக்கணக்கானோருக்கு பதின்ம வயதினரான அந்தச் சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரான திரு எக்கபோல் சந்தவோங்கும் நன்றி தெரிவித்தனர்.

2018 ஜூன் மாதம் அந்தக் காற்பந்துக் குழுவினர் குகைக்குள் நுழைந்தபோது வெள்ளநீர் புகுந்ததில் அவர்கள் அங்கு சிக்கித் தவித்தனர்.

“இந்த மக்கள் மட்டும் இல்லையென்றால் நாங்கள் உயிர்பிழைத்திருக்க மாட்டோம். உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் திரு எக்கபோல்.

எனினும், ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் மகிழ்ச்சியான நிகழ்வில் ஒருபக்கம் சோகமும் நிலவியது.

இவ்வாண்டு முன்னதாக காற்பந்து உபகாரச்சம்பளத்தில் பிரிட்டனுக்குச் சென்றிருந்த 17 வயது காற்பந்துக் குழுத் தலைவர் துவாங்பெச் புரோம்தெப் மரணம் அடைந்ததே அதற்குக் காரணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!