‘சிவாஜி’ திரைப்பட பாணியில் வெளிநாட்டு மாணவர் கும்பலின் மோசடி

கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு ‘சிவாஜி’ திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட கதையைப்போல, ஆஸ்திரேலியாவில் பணமோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர் கும்பல் ஒன்றை ஆஸ்திரேலிய போலிசார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய திருட்டுச் சம்பவமாகக் கருதப்படும் இந்த மோசடியை கடந்த ஓராண்டாக ரகசியமாக விசாரணை செய்து, தொடர்புடைய அனைவரையும் தாங்கள் கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மேற்கல்வி பயின்றுவிட்டு, சீனாவைச் சேர்ந்த ஏறக்குறைய 250 மாணவர்கள் நாடு திரும்பினர்.

காலாவதியான அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏடிஎம்வழி சட்டவிரோதமாக பணத்தை வைப்புச் செய்து, அதனை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்டு, ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளுக்குப் பரிவர்த்தனை செய்து, சட்ட ரீதியாக பணமாக மாற்றிக்கொள்ளும் மிக நுட்பமான மோசடி இது என்று போலிசார் விளக்கமளித்துள்ளனர்.

இந்த மோசடியில் குறைந்தது 62 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் புழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை கைதாணையுடன் சென்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆறு பேரை போலிசார் கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!