மற்ற நாடுகளிலிருந்து மூலம் வரும் இந்திய பயணிகளை தடுக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா

இந்தியாவில் கொவிட்-19 கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் மே 15ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அண்மையில் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.

இதற்கிடையே பல பயணிகள் தடைகளை மீறி இந்தியாவிலிருந்து வேறு வழிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சி எடுத்துள்ளனர்.

டோஹா மூலம் இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் குடிநுழைந்ததை அடுத்து இப்பிரச்சினை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து ‘கத்தார் ஏர்வேஸ்’ நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா பயணிகள் வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவிலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் வழியாக வரும் பயணிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறுக்குவழிகளைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வருவதைத் தடுப்பதற்கான மற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்றும் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!