ஆஸ்திரேலியாவில் ஓயாத வெப்ப அலை; அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வெப்ப அலையால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெர்த் வட்டாரத்தில் டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாகப் பதிவாகும் வெப்பநிலையைக் காட்டிலும் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும்.அதாவது, அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரலாம் என்று ஆஸ்‌திரேலிய வானிலை முன்னுரைப்புகள் கூறுகின்றன.

சிட்னி மற்றும் அதற்கு அருகே இருக்கும் வடக்குப் பகுதிகளில் வெப்ப அலைகள் வீசக்கூடும் என்றும் சில பகுதிகளில் வெப்பநிலை கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.

‘எல் நினோ’ காலநிலை காரணமாக ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களை வெப்ப அலை வாட்டி வதைக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் புதர்த்தீ ஏற்பட்டது என்றும் குறிப்பாக பெர்த்திலிருந்து 320 கி.மீ. தெற்கே கிட்டத்தட்ட 5,000 பேர் வசிக்கும் பெம்பர்டன் நகரத்திற்கு அருகே ஏற்பட்டது என்றும் அந்நாட்டு அவசர சேவை நிறுவனம் கூறியது.

ஆஸ்திரேலியாவின் மேற்கில் இருக்கும் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!