நண்பர்களுடன் சேர்ந்து பரிசுச்சீட்டு வாங்கிய வெளிநாட்டுவாழ் இந்தியருக்கு ரூ.34 கோடி பரிசு!

அபுதாபி: பரிசுச்சீட்டுக் குலுக்கலில் தமக்கு 25 மில்லியன் திர்ஹம் (ரூ.34 கோடி, S$5.49 மில்லியன்) பரிசு விழுந்ததை நம்ப முடியாமல் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார் ராஜீவ் அரிக்கட்.

அபுதாபியில் சனிக்கிழமை (பிப்ரவரி 3) இடம்பெற்ற 260வது ‘பிக் டிக்கெட்’ பரிசுச்சீட்டுக் குலுக்கலில்தான் ராஜீவிற்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்தது.

அல் அய்னில் வசித்து வரும் ராஜீவ், கடந்த மூவாண்டுகளாகப் பரிசுச்சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தம் மனைவியுடனும் எட்டு மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுடனும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) வசித்து வருகிறார் ராஜீவ்.

கட்டடக்கலை வரைவாளராக இருக்கும் அவர், இம்முறை தம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் என 20 பேருடன் சேர்ந்து இணையம் வழியாக அந்தப் பரிசுச்சீட்டை வாங்கினார்.

‘பிக் டிக்கெட்’ அலுவலகத்திலிருந்து தமக்குப் பெரும்பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய ராஜீவ், “இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. பெரும்பரிசை நான் வெல்வேன் என நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. உண்மையிலேயே இது கனவாக இருக்கிறது,” என்றார்.

பரிசுத்தொகையை என்ன செய்வது என இன்னும் யோசிக்கவே இல்லை என்ற அவர், இப்போதைக்குப் ‘பட்டம்போல பறந்துகொண்டிருப்பதாக’வும் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!