போதைப்பொருள் உட்கொண்ட சிறுமி; தாயைத் தேடும் காவல்துறை

ஹாங்காங்: ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தற்செயலாக உட்கொண்ட மூன்று வயதுச் சிறுமியின் தாயை ஹாங்காங் காவல்துறை தேடி வருகிறது.

ஹாங்காங்கில், கடந்த மூன்று மாதங்களில் குழந்தை ஒன்று, ஆபத்தான போதைப்பொருளைத் தற்செயலாக உட்கொண்டது இது இரண்டாவது முறை.

புதன்கிழமை, சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அச்சிறுமி போதைப் பொருள் உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையிடம் பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனை புகார் அளித்தது.

சிறுமி சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருவதாகவும் ஹாங்காங் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கு இப்போது குழந்தைக் கொடுமை அல்லது குழந்தைப் புறக்கணிப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

செப்டம்பர் 19ஆம் தேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது தந்தை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.

ஜூலை மாதம் தன் மனைவி போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகித்த அவர், காவல்துறையை அணுகாமல் சமூக ஆர்வலரின் உதவியை நாடியதாகக் கூறப்பட்டது.

சமூக ஆர்வலரின் பரிந்துரையின் பேரில் சிறுமிக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவள் ‘ஐஸ்’ போதைபொருளை உட்கொண்டது கண்டறியப்பட்டது. அதையடுத்து குழந்தை மருத்துவர் காவல்துறையிடம் புகாரளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!