துபாயில் 2023ல் மாபெரும் விமான நிலையம்

துபாய்: உலகின் ஆகப் பரபரப்புமிக்க பிரபலமான தனது விமான நிலையத்தைவிட மிகப் பெரிய விமான நிலையத்தை அமைக்க துபாய் திட்டமிட்டுள்ளது. பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்த அளவுக்கு அங்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால் இந்தத் தேவை உருவாகியுள்ளது என்று தலைமை அதிகாரி பால் கிரிபித்ஸ் தெரிவித்தார்.

இத்தனை மேம்பட்ட நவீன வசதிகளுடனும் ஒரே ஆண்டில் 120 மில்லையன் பயணிகளை நாங்கள் எட்டிவிட்டால், எங்களது முழு கொள்ளளவை அடைந்துவிட்டதை ஏற்றுக்கொண்டாகவேண்டும். அதனால்தான் ஒரு புதிய இதைவிடப் பெரிய விமான நிலையம் தேவைப்படுகிறது என்று கிரிபித்ஸ் கூறினார். அடுத்த சில மாதங்களில் வடிவமைப்புக்கான பணிகள் துவங்கும்.

தற்போதைய அல் மக்தும் விமான நிலையத்துக்கு மாற்றாக 2030ல் நகரின் புறநகர்ப் பகுதியில் அந்த பெரும் விமான நிலையம் கட்டப்படவுள்ளது. ஐக்கிய அரபுச் சிற்றரசு நடத்தும் விமான கண்காட்சியில் இது அறிவிக்கப்பட்டது. கடந்த 2022ல் சவூதி அரேபியா, ஒரு புதிய மாபெரும் விமான மையத்தை அதன் தலைநகரான ரியாத்தில் எழுப்பப் போவதாக அறிவித்திருந்தது.

இந்த ஆண்டு துபாய் விமான நிலையம் 86.9 மில்லியன் பயணிகளை வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!