ஜோகூரில் 25 இடங்களில் திடீர் வெள்ளம்

ஜோகூர் பாரு: டிசம்பர் 6ஆம் தேதி இரண்டு மணி நேரம் பெய்த இடியுடன்கூடிய கனமழையை அடுத்து ஜோகூரில் 25 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

குடியிருப்பாளர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டதாகக் கூறப்பட்டது.

அவர்களில் சிலர், தங்கள் நண்பர்கள் உதவியுடன் கதவை உடைத்தும் கூரையைப் பிரித்தும் வீட்டை விட்டு வெளியே வந்ததாகக் கூறினர்.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்களை நகர்த்த முடியாமல் சிலர் அவதியுற்றனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்புப் படையினர் மீட்புப் படகுகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

கம்போங் முகமது அமினில் 46 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 38 பேரும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் முதியவரும் அடங்குவர்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சில வாகனங்களும் திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!