சிங்கப்பூரில் விலைவாசி (பணவீக்கம்) சற்று நிம்மதியளிக்கும் வகையில் மார்ச் மாதத்தில் மிதமாக அதிகரித்தது.
கடந்த சில மாதங்களாக மூலாதாரப் பணவீக்கமும், ஒட்டு மொத்த பணவீக்கமும் உச்சக்கட்டத்தில் அதிகரித்து வந்தன.
இந்த நிலையில் மார்ச் மாதத்தில் பணவீக்கம் அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.
தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் நீங்கலாக மூலாதார பயனீட்டாளர் விலைகள், சிங்கப்பூரின் குடும்பச் செலவுகளை துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன. இது, மார்ச் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 5% கூடியது. ஆனால் பிப்ரவரியில் கூடிய 5.5 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.
2008ஆம் ஆண்டின் நவம் பருக்குப் பிறகு பிப்ரவரியில்தான் முதல்முறையாக குடும்பச்செலவு புதிய உச்சத்தைத் தொட்டது.
சேவைத் துறை, உணவு, சில்லறை வர்த்தகம் மற்றும் இதர பொருள்களின் விலைகள் மிதமாக அதிகரித்ததால் மூலாதாரப் பணவீக்கமும் மெது வடைந்தது.
இவ்வாண்டு இரண்டாவது மாதமாக ஒட்டுமொத்த பயனீட்டாளர் குறியீடு அல்லது ஒட்டுமொத்த பணவீக்கம் தொடர்ந்து மிதமாக அதிகரித்துள்ளது.
பிப்வரயில் 6.3 விழுக்காட்டிலிருந்த பணவீக்கம் மார்ச்சில் 5.5 விழுக்காட்டுக்குச் சரிந்தது. இது, ஜனவரியில் 6.6 விழுக் காடாக இருந்தது.
தனியார் போக்குவரத்து துறையில் பணவீக்கம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
மூலாதாரப் பணவீக்கம், ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகிய இரண்டுமே ராய்ட்டர்ஸ் மதிப்பிட்டதைவிட குறைவாகவே இருந்தன.
ஆனால் ஆண்டு முழுமைக்குமான ஒட்டுமொத்த பணவீக்கம் 5.5 முதல் 6.5 விழுக்காடு வரையிலும் மூலாதாரப் பணவீக்கம் 3.5லிருந்து 4.5 விழுக்காடு வரையிலும் இருக்கும் என்ற அதிகாரபூர்வ கணிப்பில் மாற்றமில்லை.
இந்த மதிப்பீட்டில் கடந்த ஜனவரியிலிருந்து ஏழு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்ட பொருள் சேவை வரியும் உள்ளடங்கியிருக்கிறது.
எரிசக்தி, உணவு பொருள் களின் விலைகள் கடந்த ஆண்டைவிட சற்றுக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக சிங்கப்பூரின் இறக்குமதி விலைகள் குறைந்தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று தெரிவித்தன.