இந்தியா

சென்னை: சிங்கப்பூரில் இருந்து முதல் முறையாக, மிகப்பெரிய சரக்குக் கப்பல், கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகம் வந்துள்ளது.
திருச்சி: முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்குச் சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்றனர்.
காசர்கோடு: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் அதிகாலை மூன்று மணியளவில் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் மே 15ஆம் தேதி நடந்தது.
புதுடெல்லி: இணையக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்துஸ்தான் காப்பர் லிமிட்டெட் நிறுவனத்திற்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கத்தில், மின்தூக்கியில் ஏற்பட்ட கோளாற்றால் 15 பேர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.