உல‌க‌ம்

பாரிஸ்: நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து போன்ற உலகின் வடபகுதிகளில் குளிர்காலத்தின்போது வானத்தில் தோன்றும் வண்ணச் சுடரொளியை (அரோரா) காண்பதற்காகச் சுற்றுப்பயணிகள் பெரும்பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் நிலவும் கடும்குளிரையும் அவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும். ஆனால், கடந்த வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள பலர் இந்த அரிய வண்ணமயமான நிகழ்வைத் தங்கள் நாட்டிலேயே கண்டுகளித்தனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கட்டுப்படத்த முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பங்காளிகள் பரிந்துரைகளை வரைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே 16ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவின.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரான கோலாம்பூரில் இருக்கும் மலேசிய மன்னரின் அதிகாரபூர்வ இல்லமான இஸ்தானா நெகாராவுக்குள் இருவர் காரில் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
கியவ்: உக்ரேன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.