உல‌க‌ம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 315ஆக அதிகரித்திருப்பதாகவும் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் ஆட்சியாளர்களின் அகதிகளுக்கான அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (மே 12) தெரிவித்தது.
டொராண்டோ: சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஆதரித்த முக்கிய நபரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஓர் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கனடிய காவல்துறை சனிக்கிழமையன்று (மே 11) தெரிவித்தது.
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை, இஸ்கந்தர் மலேசியா வட்டாரத்திலும் ‘பெங்கராங்’ எனும் இடத்திலும் அமைக்க ஜோகூர் முன்மொழிந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
ராஃபா: கூடுதலானோரை காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான 41 வயது ஸ்ரீதேவி மணி, தனது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தி மாண்டரின் மொழியைக் கற்பித்து வருகிறார்.