உல‌க‌ம்

வாஷிங்டன்: சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து வர்த்தக, புலனாய்வுக் குழுவின் செனட்டர்களுக்கு தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளிக்க இருக்கின்றனர்.
கோலாலம்பூர்: ரிங்கிட்டின் செயல்திறன் சிறந்த, வலுவான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் மார்ச் 19ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: ஹமாஸ் போராளிப் படையைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களில் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கொன்றுவிட்டன என்று வெள்ளை மாளிகையின் மூத்த பேச்சாளர் ஒருவர் செவ்வாய்க் கிழமை (மார்ச் 18) அன்று தெரிவித்தார்.
ஹாங்காங்: சீனாவில் உள்ள பல மருத்துவமனைகள் பிரசவ சேவைகளை இவ்வாண்டு நிறுத்திவிட்டதாக அரசாங்க ஆதரவு ‘டெய்லி இக்கனாமிக் நியூஸ்’ தெரிவித்து உள்ளது.
சிட்னி: சூறாவளிக் காற்று பலமாக வீசியதில் பிற பகுதிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் வடஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய 700 பேர் சிக்கிக்கொண்டனர்.