சென்னை: திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
“முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயமாக செயல்படாமல் குடும்ப உறுப்பினர்களின் கைப்பாவையாக மாறிவிட்டார். இந்த ஆட்சியைத்தான் அவர் தற்போது செயலாட்சி என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். “போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளுங்கட்சி நிர்வாகியே ஈடுபட்டுள்ளது என்றும் தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது,” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.