சென்னை மெட்ரோவில் 138 ஓட்டுநரில்லா ரயில்கள்

சென்னை: சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், எல்சிடி திரைகள் மூலம் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும் மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிகத் தாழ்வாக அமைக்கப்பட உள்ளன.

2ஆம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த ரயில்கள் 2025 ஆகஸ்ட் முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த ரயில்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ஜிபிஎஸ், ‘சிக்னல் ரீடிங்’, ‘டைமிங் சீகுவென்ஸ்’ ஆகிய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!