2ஜி வழக்கு: சிபிஐ மேல்முறையீட்டு மனு மீது விசாரணை

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதை, நீதிபதி தினேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், வரும் மே மாதத்தில் இருந்து இவ்வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் அல்ல என்பதால் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா என்பது குறித்த வாதங்கள் மட்டுமே நடைபெறும்.

எனவே, உயர் நீதிமன்ற விசாரணை விரைவாக முடியும் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரும் திமுக சார்பில் போட்டியிட உள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!