இயல்பைவிட 4% அதிகம் பெய்த பருவ மழை

சென்னை: நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட நான்கு விழுக்காடு அதிகம் பெய்துள்ளது.

இம்முறை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை 458.9 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக 442.8 மில்லி மீட்டர் அளவிலான மழை மட்டுமே பெய்யும். இம்முறை இயல்பைவிட நான்கு விழுக்காடு அதிக மழை பெய்துள்ளது.

மாநிலத்தின் 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள், ஏரிகள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. எனினும் வரும் நாள்களில் மழை அளவு படிப்படியாக குறையும் எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!