தொடங்கியது நிவாரண நிதிக்கான ‘டோக்கன்’ விநியோகம்

சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

மிச்சாங் புயல், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்ட உடைமைகள் சேதமடைந்தன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதிக்கான ‘டோக்கன்’ சனிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே வியாழக்கிழமை ‘டோக்கன்’ வழங்கப்பட்டது.

அதோடு வரும் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நியாய விலைக் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!