தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருந்து டிசம்பர் மாதம் விமானச் சேவை தொடங்கும் என்று தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறிய நகரங்களை விமானச் சேவை மூலம் இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தஞ்சை விமானப்படைத் தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்கப்படுகிறது.
முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியை அடுத்த குருகிராமை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஏர்டாக்சி நிறுவனம் இந்த விமானச் சேவையை வழங்குகிறது.
ஏர்டாக்சி நிறுவனம் இந்தியாவில் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த விமானச் சேவையை வழங்குகிறது. நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதியிலிருந்தும் பயணிகள் விமானச் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது.