மாணவா்கள் கைப்பேசிக்கு அடிமையாக வேண்டாம்: தமிழக ஆளுநா்

சென்னை: மாணவர்கள் கைப்பேசிக்கு அடிமையாகக் கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தி உள்ளார். கிண்டி ஆளுநா் மாளிகையில் எண்ணித்துணிக நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இளம் சாதனையாளா்களுடன் ஆளுநா் கலந்துரையாடினாா்.

அப்போது ஆளுநர் ரவி பேசுகையில், “குழந்தைகள் தினத்தன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நமது இளைய தலைமுறையினருக்கு இன்று வாழ்க்கையில் சாதிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதற்கான அறிவை வளா்த்துக்கொள்ளவும் பல வழிகள் உருவாகியுள்ளன. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பைச் செலுத்தினால் வெற்றிபெற்று விடலாம்.

“எந்தப் பாடமாக இருந்தாலும் மாணவா்கள் திரும்ப, திரும்ப படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் எந்தப் பாடத்திலும் சாதிக்க முடியும். தோ்வின்போது பதற்றமடைந்தால் பதில் கிடைக்காது, பதற்றம் அடையாமல் அமைதியாக யோசித்தால் பதில் கிடைத்து சிறப்பாகத் தோ்வு எழுதமுடியும்.

“விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அனைத்து விதமான போட்டிகளிலும் பதக்கங்களை வாரி குவிக்கிறது. வரும் 2047ஆம் ஆண்டில் இந்தியா உலகளவில் முதல் இடத்தைப் பெறும். அதற்கு மாணவா்கள், இளைஞா்களின் ஒத்துழைப்பு அவசியம்.

“மாணவா்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கைப்பேசி, வீடியோ கேம் விளையாட்டுகள் உள்ளன. தேவைக்கு மட்டும் அளவுடன் கைப்பேசியை மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் கைப்பேசிக்கு அடிமையாக வேண்டாம். நாட்டின் எதிா்காலம் மாணவா்கள் கையில்தான் உள்ளது,” என்றாா் ஆளுநா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!