சென்னை: பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். இதையடுத்து அந்நிலையத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. பலமணி நேரம் நீடித்த மழையின்போது சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை திடீரென சரிந்தது.
இதனால் மழைக்கு ஒதுங்கியவர்கள், பெட்ரோல் போட வந்த வாகனமோட்டிகள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 13 பேரை மீட்டனர். அவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் கந்தசாமி என்ற 53 வயது ஆடவர் மாண்டுவிட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்து தொடர்பில் பெட்ரோல் நிலைய மேலாளர் கைதானார்.