பொதுமக்களைக் கவர்ந்த ரயில் பெட்டி உணவகம்

சென்னை: சென்ட்ல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி உணவகம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அந்த ரயில் நிலையத்தின் முகப்பில் வாகன நிறுத்துமிடம் அருகே தனியார் பங்களிப்புடன் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு உள்ளே 40 பேரும் வெளியில் நின்றபடி 110 பேரும் உணவருந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரயில் பெட்டியின் மேற்கூரையில் அமர்ந்து சாப்பிட விரும்பினால் அதற்கும் வழியுண்டு. ரயில் மேற்கூரையில் 26 பேரும் அமர்ந்து உணவருந்த இயலும். திறக்கப்பட்டு இரு நாள்களே ஆன நிலையில், இந்த உணவகத்துக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மிக விரைவில் பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த உணவகங்களில் வரும் நாள்களில் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!