சென்னை: தமிழகத்தில் ேரஷன் அரிசி கடத்தல் தொடர்பில் கடந்த ஆறு மாதங்களில் 3,804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இதனை தெரிவித்தது.
பொதுவிநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு இலவசமாக அல்லது மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்பட்டு, பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை இயக்குநர் ஆ பாஸ்குமார் உத்தரவின்பேரில் காவல் துணைக் கண் காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து தமிழகம் முழுவதும் தீவிர தணிக்கை மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சோதனைகளின்போது கடந்த 6 மாத காலமாக பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி, கள்ளச்சந்தையில் அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக 3,804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 2,628 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலிசார் தெரிவித்தனர்.
இதில் தொடர்புடைய 631 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3,897 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மண்ணெண்ணெய் தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15,780 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 142 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.
மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளைகள் தவறு தலாக வணிகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதாக மொத்தம் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 420 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு 345 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலிசார் கூறினர்.