மதுரை: தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட காய் நகர்த்தும் ஒவ்வொரு கட்சியினரும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
"எங்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஒருமுறை வாக்களியுங்கள்,"
என்று கெஞ்சாத குறையாக மக்க ளிடம் கோரி வருகின்றனர்.
வாக்குப் பதிவுக்கு ஏறக்குறைய இன்னும் பத்து நாள்களே உள்ள தால், மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், தொகுதிகள்தோறும் வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் நேரில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்தபோது, "கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட திமுக ஊழல் செய்துவிடும். திமுக அராஜக கட்சி. இக்கட்சி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் நாட்டையே பட்டா போட்டு விற்றுவிடும்.
"ஒரு நாடு வளரவேண்டும் என்றால் அங்கு அமைதி இருக்கவேண்டும். அந்த அமைதியை அதிமுக அரசால் மட்டுமே கொடுக்கமுடியும்," என்றார்.
சென்னை ஆலந்தூர், பல்லாவரம், ேசாழிங்கநல்லூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, "திமுக ஆட்சிக்கு வந்தால் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு அரசுத் தரப்பில் ரூ.10,000 மானியம் வழங்கப்படும்," என்று கூறியவர், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கினார்களா? வேலை வாய்ப்பைத்தான் கொடுத் தார்களா? என வினா எழுப்பினார்.
நடக்கவுள்ள தேர்தலில் அமமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சேலம் தாதகாப்பட்டியில் பேசிய போது தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமான திருமகன் தினசரி சந்தையில் வியாபாரிகளிடம் வாக்குச் சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.கே.டி.சி.ஏ. சந்தோஷ், அங்குள்ள ஒரு சாலையோரக் கடையில் பானிபூரி விற்றபடி பிரசாரம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை தொகுதியில் பிரசாரம் செய்த விஜயபிரபாகரன், தேமுதிக வேட்பாளர் ராமசாமியின் பெயரை சிவக்குமார் என தவறாகக் கூறினார். தொண்டர்கள் சுட்டிக்காட்டியதும் உடனே சுதாரித்துக்கொண்டு, ராமசாமி எனக் குறிப்பிட்ட விஜயபிரபாகரன், "நீங்கள் எல்லோரும் கவனமாக இருக்கிறீர்களா எனப் பரிசோதித்தேன்," என்று கூறி மழுப்பினார்.