காற்பந்து: தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் பிரேசில் தோல்வி

ரியோ டி ஜெனிரோ: உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது பிரேசில்.

புதன்கிழமை காலை அர்ஜென்டினாவுக்கு எதிராக விளையாடிய பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.

ஆட்டம் வரலாற்று புகழ்பெற்ற மரக்கானா விளையாட்டரங்கில் நடந்தது. அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் ஆட்டம் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் பிரேசில் ரசிகர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அதை தடுக்க காவல்துறையினர் களத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டத்தின் முதல் பாதி பரபரப்பாகச் சென்றாலும் கோல் ஏதும் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் நிக்கோலஸ் ஒட்டமெண்டி தலையால் முட்டி கோல் அடித்தார்.

பிரேசிலின் ஜோலின்டனுக்கு 82வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அது பிரேசிலுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியது. இறுதியில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.

தென்னமெரிக்க நாடுகளுக்கான தகுதிச்சுற்றுப் புள்ளிப்பட்டியலில் தற்போது பிரேசில் ஏழு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இனிவரும் ஆட்டங்களில் அது கவனமாக ஆடத்தவறினால் அதன் உலகக் கிண்ண வாய்ப்பு பறிபோகக்கூடும்.

புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது அர்ஜென்டினா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!