புதுடெல்லி: உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் இந்தியா, சிங்கப்பூர் தோல்வியைத் தழுவியுள்ளன.
அந்த ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றன.
சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூரும் தாய்லாந்தும் மோதின. இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
புவனேஷ்வரில் இடம்பெற்ற ஆட்டத்தில் இந்தியா கத்தாரை எதிர்கொண்டது. கத்தார் இந்தியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மற்றோர் ஆட்டத்தில் தென்கொரியா சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகண்டது.
பிலிப்பீன்சுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே நடந்த ஆட்டம் 1-1 என்று சமநிலை அடைந்தது.