ரவி சாஸ்திரி: கிண்ணம் வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது

மும்பை: உலகக் கிண்ணத்தை வெல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது. புதன்கிழமையன்று (நவம்பர் 15) மும்பையில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன.

வியாழக்கிழமையன்று (நவம்பர் 16) கோல்கத்தாவில் நடைபெறவுள்ள மற்றோர் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

இந்நிலையில், இந்தியா வாகை சூடும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

“இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இம்முறை உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்லாவிட்டால், இன்னும் இரண்டு அல்லது மூன்று உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இந்தியா காத்திருக்க வேண்டும். இந்திய அணியில் தற்போது விளையாடிக் கொண்டிருப்பவர்களில் எட்டுக்கும் மேற்பட்ட வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடுகின்றனர்.

“அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி வருவது இந்திய அணிக்கு சிறப்பான அம்சமாக உள்ளது. இப்படிப்பட்ட இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்லாவிட்டால், பிறகு நீண்டகாலம் காத்திருக்க வேண்டும்.

“பந்தடிப்பில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோர் சக்கைப்போடு போடுகின்றனர். ஓர் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்.

“அதேபோல் பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது சிராஜ், முகம்மது ஷமி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் வெளுத்து வாங்குகின்றனர். எனவே, இந்திய அணி இந்த உலக கிண்ணத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. 2011ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றது. தற்போது 12 ஆண்டுகள் கழித்து உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்வதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!