மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் உல்வ்ஸ் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் திங்கட்கிழமையன்று தோற்கடித்தது.
ஆட்டம் முடிய 14 நிமிடங்கள் எஞ்சி இருந்த வேளையில், ரஃபயேல் வரானே தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது.
அதற்கு முன்பு கோல் போடும் பல பொன்னான வாய்ப்புகளை உல்வ்ஸ் குழு தவறவிட்டது.
ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்தபோது, பந்தைப் பிடிக்க விரைந்த யுனைடெட் கோல்காப்பாளரின் கைகள் உல்வ்ஸ் வீரரின் முகத்தில் பட்டது. இதனால் உல்வ்ஸ் குழுவுக்கு பெனால்டி வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
ஆனால் உல்வ்ஸ் குழுவுக்கு நடுவர் பெனால்டி வழங்கவில்லை.
இதுகுறித்து உல்வ்ஸ் நிர்வாகி கேரி ஓ நீல் கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இறுதி வரை உல்வ்ஸ் குழுவால் ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போனதால் யுனைடெட் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றது.