சூரிய சக்தி ஆற்றலை பன்மடங்கு பெருக்க $5 மில்லியன் முதலீடு செய்யும் நிறுவனம்

புலாவ் செராயா மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி அளவை அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் ஐந்து மடங்காக அதிகரிக்க ‘வொய்டிஎல் பவர் செராயா’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய புலாவ் செராயா மின் நிலையத்தில் $5 மில்லியனுக்குமேல் முதலீடு செய்து சூரிய மின் சக்தி அளவை அதிகரிக்க இருப்பதாக அந்நிறுவனம் கூறியது.

அதிகரிக்கப்படும் சூரிய சக்தி ஆற்றல், மாதத்திற்குச் சராசரியாக 417 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு அதிகத் திறன் கொண்டதாக இருக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டது.

இதன்மூலம் கிடைக்கப்பெரும் மின்சக்தி 1,000க்கும் மேற்பட்ட நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகள் பயன்படுத்துவதற்கு போதுமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட முதலீட்டையும் சேர்த்து, சூரிய சக்தியில் ‘வொய்டிஎல் பவர் செராயா’வின் மொத்த முதலீடு $6 மில்லியனுக்குமேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!