கடத்தல் நாடகமாடி உறவினரிடமிருந்து பணம் பறிக்க முயன்றவருக்குச் சிறை

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏறத்தாழ $30,000 இழந்த சுற்றுப்பயணி ஒருவர் தமது உறவினரை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றார்.

தம்மை யாரோ கடத்திவிட்டதாக சீனாவில் இருந்த தமது உறவுக்காரப் பெண்ணிடம் சீன நாட்டவரான 33 வயது லியூ சாங்ஜியாங் பொய் கூறினார். தம்மை விடுவிக்க அவர்கள் 30,000 யுவான் (S$5,600) கேட்பதாகவும் அதை அனுப்பிவைக்குமாறும் அப்பெண்ணிடம் லியூ கேட்டுக்கொண்டார்.

ஆனால் லியூ கேட்ட பணத்தை அப்பெண் அனுப்பிவைக்கவில்லை.

மாறாக, இதுகுறித்து லியூவின் தந்தையிடம் அவர் தெரிவித்தார்.

அப்போது சீனாவில் இருந்த லியூவின் தந்தை, இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறையிடம் புகார் அளித்தார்,

இந்நிலையில், லியூவை யாரும் கடத்தவில்லை என்றும் அவர் பொய் கூறினார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூவுக்கு மே 6ஆம் தேதியன்று 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!