சமயப் பணிகளோடு சமூகத் தொண்டு

சிங்கப்பூரின் ஆலயங்கள் சமயப்பணியுடன் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் பல்வேறு வழிகளில் சமூகப்பணிகளை ஆற்றிவருகின்றது.

வெள்ளிக்கிழமைகளிலும் வார இறுதி நாட்களிலும் பொதுமக்களின் உதவியோடு அன்னதானம் வழங்குகிறது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஹவ்காங், கேலாங் வட்டாரங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு உணவுப் பொட்டலங்களையும், மளிகைப் பொருள்களையும் வழங்கியுள்ளது. ஹவ்காங், கேலாங் சமூக மன்றங்களின் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஆலயத்துடன் இணைந்து பணியாற்றி ஏற்பாடுகளை மேற்கொண்டது..

பொருள்களைப் பொட்டலமிடும் தொண்டூழியர்கள். படம்: ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்

தொண்டூழியர்கள் ஏப்ரல் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் ஒன்றுகூடி 43 குடும்பங்களில் இருக்கும் 150 பேருக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் மளிகைப் பொருள்களையும் பொட்டலமிட்டனர்.

பின்னர் வீடுகளுக்குச் சென்று பொருள்களை வழங்கினர்.

வழங்கப்பட்ட மளிகைப் பொருள்கள். படம்: ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்

இந்த முதல் முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து இந்த சமூகப்பணியை மேலும் விரிவாக்கி, மாதம்தோறும் தொடர தொண்டூழியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் பல இளையர்கள் இந்தத் தொண்டூழியத்தில் இணைந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!