கேலாங்கில் பாதசாரிகள் மீது மோதி தப்பிச் சென்ற கார் ஓட்டுநர்

கேலாங் வட்டாரத்தில் சாலையைக் கடந்துகொண்டிருந்த இரு பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியது.

இதில் அந்த இரு பாதசாரிகளும் தூக்கி எறியப்பட்டு தரையில் விழுந்தனர்.

அவர்களில் ஒருவர் சாலையின் நடுவே அசைவற்ற நிலையில் கிடந்தார்.

சம்பந்தப்பட்ட கார் நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

Remote video URL

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்ட்டே ஃபேஸ்புக் குழுத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்தச் சாலை விபத்து மார்ச் மாதம் 23ஆம் தேதி இரவு 11.40 மணி அளவில் சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் சிம்ஸ் அவென்யூவில் கேலாங் லோரோங் 19க்கு அருகில் நிகழ்ந்தது.

விபத்தில் காயமடைந்த 51 வயது ஆடவரும் 32 வயது பெண்ணும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அப்போது இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கார் ஓட்டுநரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!