மோசடிகளில் உதவியதாக 31 பேர் மீது குற்றச்சாட்டு

காவல்துறை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட மோசடித் தடுப்பு நடவடிக்கையில், பல்வேறு மோசடிகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எட்டுப் பேர் பதின்ம வயதினர்.

கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அரசாங்க அதிகாரிகளைப்போல் வேடமிட்ட மோசடி, இணையக் காதல் மோசடி, வாடகை மோசடி போன்ற பல்வேறு பணமோசடிகளில் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாக மார்ச் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகிக்கப்படுவோரில் 19 பேர், தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை குற்றச்செயல் கும்பல்களிடம் பகிர்ந்துகொண்டனர் அல்லது பணப் பரிமாற்றத்துக்கு உதவியதாகக் கூறப்பட்டது.

மேலும் மூவர், தங்கள் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி, ஏடிஎம் அட்டைகளையும் இணைய வங்கிச் சேவைக்கான விவரங்களையும் மோசடிக்காரர்களிடம் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

எஞ்சிய ஒன்பது பேர், வங்கிக் கணக்குத் தொடங்க ஏதுவாக மோசடிக்காரர்களிடம் தங்கள் சிங்பாஸ் விவரங்களை விற்றதாகக் கூறப்பட்டது.

பணமோசடிகளை ஒடுக்கவும் வங்கி, சிங்பாஸ் கணக்கு விவரங்களை விற்பதைத் தடுக்கவும், 2023 மே மாதம் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.

அச்சட்டங்களின்கீழ், மோசடிக்காரர்கள் என்று தெரியாமல் வங்கி, சிங்பாஸ் கணக்கு விவரங்களைத் தந்ததாக மோசடிக்கு உதவிய யாரும் கூற முடியாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!