81 வயது தாயாரைப் பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதை ஒப்புக்கொண்ட ஆடவர்

தம் மனைவியைத் தாக்கியதற்காக வீட்டிலிருந்து வெளியேற நேரிட்ட ஆடவர் ஒருவர், உதவிக்காக தம் 81 வயது தாயாரிடம் திரும்பினார். ஆனால், குடிபோதையில் தாயாருடைய வீட்டிற்குத் திரும்பிய அந்த ஆடவர், அவரைப் பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதோடு கழுத்தையும் நெரித்தார்.

பலமுறை குற்றம் புரிந்த அந்த ஆடவருக்கு இப்போது வயது 61. பாலியல் ரீதியாகத் தாக்கி தம் 60 வயது மனைவிக்குக் கடும் காயம் விளைவித்த குற்றத்தை செவ்வாய்க்கிழமை அவர் ஒப்புக்கொண்டார்.

1982 முதல் 2019 வரை அந்த ஆடவரின் குற்றப் பதிவேட்டில் 50 பதிவுகள் உள்ளன. அவர் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

அந்த ஆடவரைத் தடுத்து வைப்பதற்கான சூழலை ஆராய அறிக்கை ஒன்றை உயர் நீதிமன்ற நீதிபதி கோரியதைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொதுமக்களைப் பாதுகாக்க, மீண்டும் குற்றம் புரிவோர் ஏழு முதல் 20 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்படலாம்.

வீட்டை உடைத்துப் புகுந்து திருடுவது, முறைகேடான நடத்தை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக கடந்த காலத்தில் அந்த ஆடவருக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!