வர்த்தகரான ஃபிலிப் சான், வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் அரசியல்ரீதியாக குறிப்பிடத்தக்க நபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (26 பிப்ரவரி) உள்துறை அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
சிங்கப்பூரில் பல சொத்து முதலீட்டு நிறுவனங்களில் நிர்வாக இயக்குநராக உள்ள அவர் மீது பொதுமக்கள் நலன்கருதி பதில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வெளிநாடு, அரசியல் சார்ந்த தகவல் வெளியீடுகளுக்கான பதிவகம் கருதியதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
அவரது முறையீட்டை பதிவகம் பரிசீலித்து உள்ளது. ஆனால் அவர் ஒரு அரசியல்ரீதியான நபர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று பதிவகம் வலியுறுத்தியுள்ளது.
இம்மாதம் 2ஆம் தேதி ஹாங்காங் வர்த்தகரான அவரை அரசியல் நபர் என அறிவிக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர்.
வெளிநாட்டு நபர்களின் செல்வாக்கிற்கு ஆளாகக்கூடிய தன்மையை கொண்டிருந்ததாகவும் அவர்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் அப்போது உள்துறை அமைச்சு கூறியது.
இந்த நிலையில் அதன் அண்மைய அறிக்கையில், திரு சான் அரசியல்ரீதியாக குறிப்பிடத்தக்க முக்கிய நபராக அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவரது செயல்பாடுகள், சிங்கப்பூரில் அரசியல் நோக்கம் கொண்டதாக இருப்பதற்கு அதற்கு காரணம் என்றும் அமைச்சு விளக்கியது.
திரு சான் அரசியல்ரீதியான நபராக அறிவிக்கப்பட்டதால் $10,000 அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் நன்கொடைகளை முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் இடம்பெயரும் பலன்களையும் அவர் தெரிவிக்க வேண்டும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக சிங்கப்பூர் வந்த திரு ஃபிலிப் சான், சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றவர்.
இந்தச் சட்டத்தின் கீழ் கையாளப்படும் முதல் நபர் திரு சான். இந்த முடிவு எதிராக அவர் உள்துறை அமைச்சிடம் மேல்முறையீடு செய்யலாம். அதற்கு காலவரம்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.